டெல்லி: தீவிரவாதிகள் போன்று துப்பாக்கிச்சுடு நடத்தும் அளவுக்கு வழக்கறிஞர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் அல்ல இந்திய பார் கவுன்சில் கூறியது. டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று இந்திய பார் கவுன்சில் கூறியது. வழக்கறிஞர்களை தாக்கிய போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பார் கவுன்சில் தெரிவித்தது.