×

காளையார்கோவில் கால்நடை மருந்தகத்தில் ஆட்டிற்கு கர்ப்பப்பை ஆபரேஷன்: டாக்டர்கள் அசத்தல்

காளையார்கோவில்: காளையார்கோவில் அருகே உள்ள கிராமத்தில் வெள்ளாட்டிற்கு கர்ப்ப பை ஆபரேஷன் நடைபெற்றது. காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மந்திக்கண்மாய் கிராமத்ைத சேர்ந்தவர் ரெங்கசாமி(45). இவர் தனது வீட்டில் வெள்ளாடுகள் வளர்த்து வருகின்றார். இவற்றில் ஒரு வெள்ளாடு ஐந்து மாத சினையாக இருந்தது. ஆட்டின் வியிற்றுப்பகுதி இயல்பைவிட அதிகமான இறக்கத்துடன் காணப்பட்டது. உடனே அருகில் இருந்த காளையார்கோவில் அரசு கால்நடை மருந்தகத்திற்கு ஆட்டை கொண்டு சென்றார். அங்கு கால்நடை மருத்துவர் பரிசோதித்ததில் கர்ப்பப்பையில் கிழிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஆட்டிற்கு அறுவை சிகிச்சை செய்தபோது வயிற்றில் உள்ள குட்டி இறந்து இருப்பதை கண்டறிந்தார். இறந்த ஆட்டுகுடியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு கிழிசல் ஏற்பட்ட கர்ப்ப பையில் தையலிட்டு ஆட்டின் உயிரை காப்பாற்றினர். அறுவைசிகிச்சை செய்த காளையார்கோவில் கால்நடை மருத்துவக்குழு மருத்துவர்களை கால்நடை உதவி மருத்துவர் விஜயக்குமார், ஆவின் மருத்துவர் லோகேஷ், கால்நடை ஆய்வாளர் ரோஸ்லின்செல்வம், பராமரிப்பு உதவியாளர் மனுவேல் மற்றும் ஆவின் காமராஜ்  ஆகியோர் பாராட்டினர்.

Tags : Veterinary Pharmacy , Operation
× RELATED புதிய கால்நடை மருந்தகம் துவக்கம்