×

இடைத்தேர்தல் வெற்றி மக்களின் மனநிலை மாற்றத்தை காட்டுகிறது: ஜி.கே.வாசன் டெல்லியில் பேட்டி

டெல்லி: மத்திய, மாநில அரசுகள் மீதும் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது, அதனாலேயே இடைத்தேர்தலில் வெற்றி பெற்றோம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் பேட்டியளித்தார். இடைத்தேர்தல் வெற்றி மக்களின் மனநிலை மாற்றத்தை காட்டுகிறது எனவும் கூறினார். கல்வி, விவசாயம், தொழில், வேலைவாய்ப்பு, தமிழுக்கான முக்கியத்துவம் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினேன் என கூறினார். கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடியை சந்தித்து 20 நிமிடம் பேசினேன் என தெரிவித்தார்.


Tags : victory ,GK Vasan Delhi ,mood change , By-election victory ,people's mood, change, Interview ,K Vasan Delhi
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...