திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் ரங்கராஜன் சிலை மாற்றப்பட்டு உள்ளதாக புகார் அளித்த ரங்கராஜன் என்பவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் பற்றி முகநூலில் ரங்கராஜன் அவதூறாக கருத்து வெளியிட்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ரங்கராஜன் மீது அவதூறு வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் போலீஸ் அவரைக் கைது செய்ய வீட்டுக்கு முன் காத்திருக்கின்றனர்.