குமரி: கடந்த 17 நாட்களுக்கு முன் அரபிக் கடலில் ஏற்பட்ட புயலில் சிக்கி தத்தளித்த 58 மீனவர்கள் தேங்காய்பட்டடினம் துறைமுகம் வந்தடைந்தனர். குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் படகுகள் புயலால் கோவா, லட்சத்தீவு, கேரளாவில் கரை ஒதுங்கினர். புயலில் சிக்கிக் கொண்ட 5 படகுகள் 3 நாட்களுக்கு பின் கரைக்கு வந்து சேர்ந்தனர். மேலும் 5 படகுகளில் இருந்த 58 மீனவர்கள் தற்போது சொந்த ஊருக்கு சென்றனர்.