திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் துபாய், சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்துவரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இரவு முதல் நடைபெற்று வரும் சோதனையில் இதுவரை சுமார் 70 கிலோ தங்கம் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.