சென்னை: சென்னை தி.நகரில் டியூசன் சென்டரில் மாணவ, மாணவிகளை ஒன்றாக இருக்கவைத்து வீடியோ எடுத்து டியூசன் டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பணம் ப றித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகரை சேர்ந்தவர் சஞ்சனா(28), பட்டதாரியான இவர் வீட்டிலேயே டியூசன் சென்டர் நடத்திவருகிறார். 10,11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாடம் எடுத்து வருகிறார். இவரிடம் டியூஷன் படிக்கும் மாணவி ஒருவர் சோர்வடைந்து, ஆடைகள் கலைந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்துள்ளார். இதைபார்த்த பெற்றோர் விசாரித்தனர். அப்போது, டியூசன் சொல்லிக்கொடுக்கும் சஞ்சனா டீச்சர் மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜி (38) ஆகியோர் தன்னை மிரட்டி உடன் படிக்கும் சக மாணவனுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருக்க வைத்து படமும், வீடியோவும் எடுத்ததாக தெரிவித்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் டீச்சர் சஞ்சனா மற்றும் அவரது ஆண் நண்பர் பாலாஜியை பிடித்து நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, டியூசன் சென்டரில் படுக்கை அறை ஒன்றை இதற்கென பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். அழகான மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களை ஒன்றாக சேர்த்து படுக்கை அறையில் நிர்வாணமாக நிற்க வைத்து பலகோணங்களில் புகைப்படங்கள் எடுத்தும், இருவரையும் ஒன்றாக இருப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளனர். இதுபோல், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பாலாஜி அந்த வீடியோவை காட்டி மாணவிகளை மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க வற்புத்தியுள்ளார். மறுப்பு தெரிவிக்கும் மாணவிகளிடம் வீடியோவை சமூக வலைதளங்கள் வெளியிட்டுவிடுவேன் எனக்கூறி பணம் பறித்தது தெரியவந்தது. அனைத்து குற்றங்களுக்கும் சஞ்சனா தனது ஆண் நண்பர் பாலாஜிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இருவரிடம் உள்ள செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். அதில், 10க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாச வீடியோ இருந்தது தெரியவந்தது. இதை கைப்பற்றிய போலீசார் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், இதுவரை அவர்கள் எத்தனை மாணவ, மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்துள்ளனர். எவ்வளவு பணம் பறித்துள்ளனர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் டியூசனுக்கு அனுப்பும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.