×

மனைவி மர்மச்சாவு: கணவனிடம் விசாரணை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் ஏழுமலை (40). இவரது மனைவி வனிதா (32). தம்பதிக்கு யோகேஷ்வரன், மாதேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வனிதா திடீரென இறந்தார்.   பின்னர் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு சடலத்தை கொண்டு சென்றார். உறவினர்கள் கேட்டபோது உடல் நலம் சரியில்லாமல் மனைவி வனிதா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார். சந்தேகமடைந்த வனிதாவின் தந்தை குப்புசாமி, மகள் வனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக, போலீசில் புகார் அளித்தார். போலீசார், வனிதாவின் உடலை மீண்டும் ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூருக்கு அனுப்பி வைத்தனர். திருவொற்றியூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏழுமலையிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Wife Marmachau ,death ,investigation , Wife's death, investigation ,husband
× RELATED கனியாமூர் பள்ளி தொடர்பான வழக்கின்...