×

இறுதி ஊர்வலத்தில் தகராறு வாலிபருக்கு அரிவாள் வெட்டு

பெரம்பூர் : வியாசர்பாடி உதயசூரியன் நகர் 9வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (35). இவரது வீட்டின் அருகே நேற்று முன்தினம் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் மதுபோதையில் பங்கேற்ற நாகராஜூக்கும், மற்றொருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், இருவரையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில், அன்று நள்ளிரவு வியாசர்பாடி உதயசூரியன் நகர் பூங்கா அருகே இருந்த நாகராஜை, 5 பேர் சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் நாகராஜ் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். நாகராஜுக்கு ஜீவிதா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : funeral ,dispute plaintiff , Funeral procession, young men, sickle cut
× RELATED இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி...