×

உயர்மின் கோபுரத்துக்கு எதிர்ப்பு விவசாயிகளுக்கு ஆதரவு: முத்தரசன்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை:தாராபுரம் அருகில் அமைக்கப்படும் மிகப் பெரிய மின் சேமிப்பு மையத்தில் இருந்து, வட மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல, கோயமுத்தூர் தொடங்கி, திருவண்ணாமலை வரையிலான 16 மாவட்டங்கள் வழியாக மின்தொடரமைப்பு அமைக்க விவசாய சாகுபடி நிலங்களில்  உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை கைவிட்டு, மாற்று வழியில் அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என போராடி வருகிறார்கள்.இந்த நிலையில் வருகிற 18ம் தேதி 16 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட மையங்களில் விவசாயிகள் மறியல் அறப்போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூற்பட்டுள்ளது.


Tags : Mutharasan ,tower ,Mutt , Resistance , Superior, Farmers, Mutharasan
× RELATED ஹிட்லரை பின்பற்றும் பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு