திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த கடந்த சில வருடங்ளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடை மீறப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, அதை கடுமையாக்கும் படி கேரள பொது கல்வி துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி கேன்டீன்களில் பீட்சா, பர்கர், சிப்ஸ்,கோலா குளிர்பானங்கள், குலாப்ஜாமூன், கார்போனைட் ஜூஸ் ஆகியவற்றை விற்பதற்கும் தடை விதிக்க பட உள்ளது. பள்ளியில் இருந்து 50 மீட்டர் சுற்றளவில் இந்த உணவுகளை விற்கவும் தடை வருகிறது. அடுத்த மாதம் முதல் இந்த தடையை அமல்படுத்த தீர்மானித்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை கூறப்படுகிறது.