×

திருக்கோவிலூர் அருகே பயங்கரம் பச்சிளங்குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்த கொடூர தந்தை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே பச்சிளங்குழந்தையை உயிருடன் புதைத்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம்  மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சுந்தரேசபுரம் கிராமத்தை சேர்ந்த  கலியபெருமாள் மகள் சவுந்தர்யா (19). இவருக்கும் வடமருதூரை  சேர்ந்த துரைகண்ணு மகன் வரதராஜ் (27) என்பவருக்கும் ஒரு வருடத்திற்கு  முன் திருமணம் நடந்தது. சில மாதங்களில் சவுந்தர்யா  கர்ப்பமடைந்தார். அப்போது மாமனார் துரைகண்ணு, எங்களுக்கு  ஆண் குழந்தைதான் வேண்டும், பெண் குழந்தை பிறந்தால் நீயும் (சவுந்தர்யா),  குழந்தையும் வேண்டாம். அப்படி பிறந்தால்  நானும், எனது மகனும் சேர்ந்து  கொலை செய்து விடுவோம் என்று கூறி உள்ளார். இதனை சவுந்தர்யா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள்  குழந்தை பிறக்கும்போது பார்த்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில்  கடந்த 20ம்தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சவுந்தர்யாவுக்கு  பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சவுந்தர்யா மருத்துவமனையில் இருந்து  சுந்தரேசபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். கடந்த 10  நாட்களுக்கு வரதராஜ் வந்து மனைவி, குழந்தையை  பார்த்துவிட்டு அங்கேயே தங்கியுள்ளார். அடுத்த 2 நாளில், அத்தண்டமருதூரில்  உள்ள தனது காட்டுகொட்டாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில்  நேற்று அதிகாலை சவுந்தர்யாவுடன் தூங்கிய குழந்தை  காணாததால் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கணவரிடம் கேட்டார். அதற்கு  அவர் தெரியவில்லை என்று கூறினார். சந்தேகமடைந்த சவுந்தர்யா,  உறவினர்களுடன் சேர்ந்து தேடியுள்ளார். அப்போது அங்குள்ள ஆற்றுப்பகுதியில் புதிய குழி தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழியில் மண்ணை எடுத்துபார்த்தபோது, குழந்தை  இறந்து கிடந்ததை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசில் சவுந்தர்யா புகார் அளித்தார்.  அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்து குழந்தையின் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்  கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வரதராஜ், தாத்தா துரைகண்ணு ஆகிய இருவரையும் கைது  செய்து விசாரணை நடத்தினர். அதில், நேற்று  முன்தினம் குழந்தையை தூக்கி சென்ற வரதராஜ்,  தெண்பெண்ணையாற்று பகுதியில் உயிருடன் புதைத்தது தெரியவந்தது. பெண்ணாக பிறந்ததால் குழந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tirukovilur , Horrific ,father buried alive , Tirukovilur
× RELATED முகையூர் பகுதி மக்களுக்கு ஓட்டுக்கு...