சென்னை: பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் ம.நீ.ம கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.