சேலம்: வாழப்பாடி அருகே கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்த பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மன்னாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆறுமுகம் என்பவரின் பிளாஸ்டிக் தொழிற்சாலை, கொசு உற்பத்தியாகும் நிலையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து பிளாஸ்டிக் ஆலையை ஆய்வு செய்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.