மதுரை: நீட் பயிற்சி மையத்துக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாக கூறி பணம் கையாடல் செய்த தலைமை ஆசிரியர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்று தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கடையநல்லூர் நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லையை சேர்ந்த பரசுராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.