சென்னை: மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்லும் படகுகளுக்கு அனுமதி சீட்டு வழங்க வேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அனுமதி சீட்டு வழங்க வேண்டாம் என மீன்வளத்துறை உதவி இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.