சென்னை: தாம்பரம் அருகே பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் மாணவர் முகேஷ் என்பவர் காயம் அடைந்துள்ளார். நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது முகேஷ் நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. காயமடைந்த முகேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.