சென்னை: திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல என்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளுவர் மீது காவிசாயம் அடிப்பது, சிலையை அவமதிப்பது போன்றவை மூலம் தமிழ் உணர்வாளர்கள் ஆத்திரமூட்டப்படுகிறார்கள். திருவள்ளுவர் சிலை குறித்து தமிழக முதல்வரோ, கண்டனம் தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.