வேலூர்: சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து நளினி உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். தனது கணவரை சிறைத்துறை அதிகாரிகள் சித்திரவதை செய்வதாக கூறி கடந்த 11 நாட்களாக வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் இருந்தார். நளினி உண்ணாவிரதத்தை முடித்து கொண்ட போதிலும் அவரது கணவர் முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார்.