தூத்துக்குடி: மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்காக விரைவில் 5 ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளனர் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார். பருவமழை காலம், புயல் உள்ளிட்டவைகளை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.