×

கள்ளக்குறிச்சி அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். வடமருதூர் கிராமத்தில் பெண் குழந்தையை அடித்து கொன்று ஆற்று மணலில் புதைத்த தந்தை வரதராஜ் கைது செய்யப்பட்டார்.  பெண் குழந்தையை கொன்று விடுவதாக அடிக்கடி மிரட்டியதாக வரதராஜ் மீது மனைவி சவுந்தர்யா புகார் தெரிவித்திருந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த  பெண் குழந்தையை காணவில்லை என்று மனைவி சவுந்தர்யா அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Kallakurichi ,baby girl , Kalugurichi, girl child, slaughter, father arrested
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...