பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் மீது லத்தி வீசிய காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தத்தை பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்ட எஸ்.பி.சுஜித்குமார் உத்தரவிட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் சம்பந்தம் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்காக விசாரணைக்கு எஸ்.பி.உத்தரவிட்டுள்ளார்.