சென்னை: போயஸ் கார்டன் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் சசிகலாவின் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல் தெரிவிக்கப்பட்டு்ள்ளது. பணமதிப்பிழப்பின் போது போயஸ் கார்டனில் இருந்த ரூ.500, 1000 நோட்டுக்களை தனியார் நிறுவனங்கள் மூலம் மாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜாஸ் சினிமாஸ், ஸ்பெக்ட்ரம் மால், கோவை செந்தில் பேப்பர் மில் மற்றும் புதுச்சேரியில் ரிசார்ட் ஆகியவற்றை பினாமி பேரில் வாங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.