×

மதிமுகவினர் மீது தாக்குதல் திருச்சி கோர்ட்டில் சீமானுக்கு குற்றப்பத்திரிகை நகல்

திருச்சி: சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்தாண்டு மே 19ம் தேதி மதிமுக பொது செயலாளர் வைகோ விமானம் மூலம் வந்தார். அவரை வரவேற்க மதிமுகவினர் திரண்டு இருந்தனர். அதே விமானத்தில்் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வந்தார். அப்ேபாது மதிமுக, நாம் தமிழர் தொண்டர்கள் கட்டையாலும், கொடி கம்பத்தாலும் தாக்கிக் கொண்டனர்.  இதுதொடர்பாக  சீமான் உட்பட 14 பேர் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்குபதிந்தனர். இந்த வழக்கில் திருச்சி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு திருச்சி ஜேஎம் 6 நீதிமன்றத்தில் நேற்று மாஜிஸ்திரேட் ஷகிலா முன் நடந்தது. அப்போது  சீமான் உள்பட 14 பேரும் ஆஜராகினர். அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கபபட்டது.

Tags : Attorney ,Attacks ,Math Seeman ,Trichy Court , Mathimukha, Trichy Court, seaman, copy of charge sheet
× RELATED தேர்தல் விழிப்புணர்வு ேகாலம்