×

பிரதமர் குறித்து அவதூறு விமர்சனம் காங். நிர்வாகி ஓராண்டு முகநூல் பயன்படுத்த தடை: ஐகோர்ட் கிளை நூதன தண்டனை

மதுரை: பிரதமர் குறித்து தவறாக விமர்சித்த வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி ஓராண்டுக்கு முகநூல் பயன்படுத்தக்கூடாது என ஐகோர்ட் மதுரை கிளை நூதன தண்டனை விதித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம், கடமலைகுண்டுவை சேர்ந்தவர் ஜெபின் சார்லஸ். குமரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரான இவர், இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் சந்திப்பு குறித்து தனது முகநூலில், பிரதமரை தவறாக சித்தரித்து கருத்துப்படம் வெளியிட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனடிப்படையில் வடசேரி போலீசார், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி, ெஜபின் சார்லஸ் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் தனது தரப்பில் மன்னிப்பு கோரி மனுதாரர் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். அடுத்து ஓராண்டுக்கு அவர் முகநூல் பயன்படுத்தக்கூடாது. மீறினால், இவரது முன்ஜாமீனை ரத்து செய்யலாம் என உத்தரவிட்டார்.


Tags : Kong ,ICort Branch ,Administrator , Prime Minister, Icort Branch, Congress
× RELATED காட்ஸில்லா எக்ஸ் காங் – தி நியூ எம்பயர் – திரைவிமர்சனம்!