×

போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், சபாபதி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (30). இவர், ஆவடி சிறப்பு காவல்படை காவலர். இவரது மனைவி கல்பனா (25). இவர், சில தினங்களுக்கு முன்பு, தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.இந்நிலையில், ராஜேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். பின்னர், நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று  பார்த்தபோது,  பீரோ  உடைக்கப்பட்ட அதில் இருந்த 5 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து,  ராஜேஷ்குமார்  சேலையூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு  பதிவு  செய்து விசாரித்து  வருகின்றனர்.


Tags : house ,Robbery ,policeman , Robbery, policeman, house
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்