×

பெண்ணிடம் ரகளை 2 வாலிபர்கள் கைது

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் மதன். இவரது இளைய மகள் பவித்ரா (19). இவர்,  நேற்று  தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது,  குடிபோதையில் 2 வாலிபர்கள் பவித்ராவிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து  பவித்ரா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தார். இந்நிலையில் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் அருகில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிந்தது. அங்கு சென்ற போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர்.  அதில் புளியந்தோப்பு வஉசி நகரை சேர்ந்த கார்த்திக் (19), தினேஷ் (20) என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார்,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : girls ,juveniles , Roll , woman, 2 juveniles, arrested
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்