மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பணம் மோசடி செய்தவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி லட்சுமி என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார். மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனுர் பெருமாள்பட்டியை சேர்ந்த சின்னசாமி என்பவர் ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக லட்சுமி புகார் தெரிவித்துள்ளார்.