சென்னை: மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை காவல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். மாஞ்சா நூல் கடைகளில் விற்கப்படுகிறதா என சோதனை நடத்த 15 குழுக்குள் அமைக்கப்பட்டுள்ளது என்று காவல்துறை அதிகாரி தினகரன் கூறினார். ஆன்லைன் மூலம் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா எனவும் போலீஸ் கண்காணிக்கும் என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.