சென்னை: தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் நலத் திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்து ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுவது கண்டிக்கத்தக்கது என்றும் ஸ்டாலின் கூறினார்.