×

சீனப்பெண்ணை கரம் பிடித்த சேலம் டாக்டர்: 5 ஆண்டு காதல் திருமணத்தில் முடிந்தது

சேலம்: ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் சேலம் டாக்டர், சீன இளம்பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார். சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு அன்புநகரை சேர்ந்தவர் பரசுராம். இவரது மகன் அருண்பிரசாத் (32). இவர் கடந்த பத்து ஆண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் அருண்பிரசாத்துக்கும், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வரும் சீனாவை சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் என்ற இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கி பழகி காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் அருண்பிரசாத் தான் கிறிஸ்டல் ஜியாங்யிடம் தனது காதலை தெரிவித்துள்ளார். முதலில் மறுத்த கிறிஸ்டல் பின்னர் காதலிக்கத் தொடங்கியுள்ளார். பின்னர் அருண்பிரசாத் சேலத்தில் உள்ள தனது பெற்றோரிடம், சீன பெண்ணை தான் காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு அருண்பிரசாத்தின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதுபோல கிறிஸ்டலும், அவரது பெற்றோரிடம் aஅருண்பிரசாத்தை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெற்றார். இவர்களது திருமணம் கிறிஸ்துவ முறைப்படி நேற்று காலை சேலம் ஜான்சன்பேட்டையில் உள்ள அந்தோணியார் ஆலயத்தில் நடந்தது. சேலம் பிஷப் சிங்கராயன் திருமணத்தை நடத்தி வைத்தார்.

திருமண வரவேற்பு விழா ஏற்காடு அடிவாரத்தில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடந்தது. இதில் அருண் பிரசாத்தின் உறவினர்களும், நண்பர்களும், கிறிஸ்டல் பெற்றோரும் பங்கேற்றனர். மணமக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்தினர். வரவேற்பில் சீனப் பெண்ணான கிறிஸ்டல் பட்டு சேலை அணிந்திருந்தார். வரும் ஜனவரி மாதத்தில் சீனாவில் இருவருக்கும் திருமண வரவேற்பு நடத்த ஏற்பாடும் நடந்து வருகிறது.

Tags : Salem Doctor ,Chinese , Chinese girl
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...