சென்னை: கடல் ஆமை மற்றும் கடல் பசு பாதுகாப்பு மையம் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாகை கோடியக்கரை வன சரணாலயத்தின் அருகில் ஆமை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முப்பரிமாண அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட உள்ளது. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்தி நவீன வசதிகளுடன் கூடிய கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.