சென்னை: சென்னையில் சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத ரசீதுகளில் தமிழை புறக்கணித்தது கண்டனத்துக்குரியதாகும் என வைகோ கூறினார். அபராத ரசீதுகளை தேசிய தகவல் மையம் வடிவமைத்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு அதிமுக அரசு துணை நிற்கிறது. பிரதமர் மோடி தமிழின் பெருமையை பறைசாற்றிக் கொண்டு இருக்கும் போது இன்னொரு பக்கம் தமிழை அளிக்கும் செயல்கள் நடக்கிறது.