தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணியை வீசிச் சென்றுள்ளனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.