பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் புதிய புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் புதிய புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட பிறகு அவர் லஞ்சம் கொடுத்து சொகுசு வசதிகளை பெற்று வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையை கிளப்பியது. மேலும் சசிகலா ஷாப்பிங் சென்று வரும் வீடியோ வெளியாகி பெரும் பரபர்பை ஏற்படுத்தியது.
தற்போது சசிகலா சுடிதார் அணிந்து சிறை வளாகத்திற்குள் நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் புதிதாக வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது எந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது என்ற தெளிவான விவரம் தெரியவில்லை. இருந்தபோதும் இந்த புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.