×

சேந்தமங்கலம் அருகே வீட்டின் முன் குப்பை கொட்டிய மூதாட்டியை கொன்ற தம்பதி: சேலம் சிறையில் அடைப்பு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, குப்பை கொட்டியதில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி பலியானார். இது தொடர்பாக தம்பதியினர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூக்காயி(70). இவரது கணவர் மாரியப்பன் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டதால், மூக்காயி தனியாக வசித்து வந்தார். இவரது  பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(65), அவரது மனைவி ஜீவஜோதி(63). மூக்காயி தனது வீட்டு வாசலில் சேரும் குப்பைகளை, கடந்த சில மாதங்களாக ராஜமாணிக்கம் வீட்டு முன் போட்டு வந்தார். இதனால் இவர்களுக்குள் தகராறு  இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம், மூக்காயி வழக்கம் போல் குப்பைகளை கொட்டிய போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜமாணிக்கம், அவரது மனைவி ஜீவஜோதி இருவரும் சேர்ந்து, மூக்காயியை சரமாரியாக தாக்கினர். இந்த  தாக்குதலில் படுகாயம் அடைந்த மூக்காயி, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு  மூக்காயி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதையடுத்து, எருமப்பட்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, ராஜமாணிக்கம், அவரது மனைவி ஜீவஜோதி ஆகியோரை கைது செய்து,  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.



Tags : Sethamangalam ,house ,Salem , Chandamamangalam,house,Salem,
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை