×

ஜவாஹிருல்லா தகவல் புதிய கல்விக்கொள்கை எதிர்த்து சென்னையில் 9ல் ஆர்ப்பாட்டம்

தென்காசி: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா நேற்று தென்காசியில் அளித்த பேட்டி: கூடங்குளம் அணுமின் நிலைய இணையதளத்தில் வட  கொரிய நாட்டைச் சேர்ந்த குழுவினர் ஊடுருவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  எனவே அணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

புதிய கல்விக் கொள்கை  ஏழை எளிய மக்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் செயலாக உள்ளது. எனவேஇதை  எதிர்த்து வருகிற 9ம் தேதி மாலை சென்னை அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வி  ஆர்வலர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : information protests ,Jawaharlalla ,Chennai ,Jawahirullah Information Oppose the New Education Policy Demonstration , Jawahirullah ,education,Chennai 9
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...