×

தொடர் உண்ணாவிரதம் நளினி, முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்றம்

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்து முருகனை கொடுமைப்படுத்துவதாக கூறி அவரது மனைவி நளினி, பெண்கள் சிறையில் கடந்த 26ம்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 9வது  நாளாக நேற்று நளினி உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். அதேபோல் தன்னை தனியறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி முருகனும் 17வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இருவரின் உடல்நிலை குறித்து  மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், நளினிக்கு நேற்று முன்தினம் முதல் ஓஆர்எஸ் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் உண்ணாவிரதம் இருக்கும் இருவருக்கும்  நேற்று குளுக்கோஸ் ஏற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Nalini ,Murugan , Continuous ,fasting Nalini, Murugan,uptake
× RELATED முருகன் பாஸ்போர்ட் பெற நேர்காணலுக்கு...