×

ஒருவர் கூட கட்டணம் செலுத்தவில்லை உபி கிராமத்துக்கு மின் இணைப்பு துண்டிப்பு

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மக்கள் ரூ.91 லட்சம் மின் கட்டண பாக்கி வைத்திருந்ததால், அந்த கிராமத்துக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசம், ஷாம்லி மாவட்டத்தில் உள்ளது ஜகன்புரா கிராமம். இங்கு மொத்தம் 300 வீடுகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களில் ஒருவர் கூட கடந்த மாத மின் கட்டணத்தை செலுத்தவில்லை. அனைவரின் கட்டண பாக்கியும் ரூ.91.88  லட்சம் இருந்தது. உ.பி மின் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பை சந்திந்ததால், மின் கட்டணத்தை வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இதனால், அப்பகுதி மின்வாரிய அதிகாரி அதுல் யாதவ், மக்களுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினார்.  அப்படியிருந்தும் யாரும் மின் கட்டணம் செலுத்தவில்லை. இதனால், அந்த கிராமம் முழுவதுக்கும் நேற்று மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.


Tags : village ,Ubi ,Ubi Electrical , village , Ubi, Electrical, disconnection
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...