சென்னை: தண்டையார்பேட்டை கோட்டம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை (5ம் தேதி) காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டை செயற்பொறியாளர் அலுவலகம், எண்.805, டி.எச்.ரோடு, என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இதேபோல், மயிலாப்பூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை காலை 10.30 மணிக்கு மயிலாப்பூர் கூடுதல் தலைமை பொறியாளர் அலுவலகம், மத்திய சென்னை மின் பகிர்மான வட்டம், எண்.97, எம்.ஜி.ஆர் சாலை, 110 கி.வோ, வள்ளுவர்கோட்டம் துணைமின் நிலைய வளாகம், சென்னை-34 என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம். கே.கே.நகர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நாளை காலை 11 மணிக்கு கே.கே.நகர் செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கி.வோ, கே.கே.நகர் துணை மின்நிலைய வளாகம், கே.கே நகர், சென்னை-78 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.