×

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய போலீஸ்காரர்: கமிஷனர் பாராட்டு

சென்னை: வீட்டு கதவை உள்பக்கமாக தாழிட்டு தற்கொலைக்கு முயன்ற முதியவரை, கதவை உடைத்து காப்பாற்றிய காவலரை கமிஷனர் பாராட்டினார். கோயம்பேடு சீனிவாசா நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (65), மத்திய அரசு ஊழியர், குழந்தைகள் இல்லை. இவரது மனைவி சில தினங்களுக்கு முன்பு தாய்வீட்டுக்கு சென்று விட்டார். ஸ்ரீதர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதர், தான் தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், தனது  மரணத்துக்கு யாரும் காரணம் இல்லை என்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், எஸ்ஐ வேடி மற்றும் போலீஸ்காரர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு ஸ்ரீதர் வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. உடனே காவலர் செல்வம், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஸ்ரீதர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை தனது தோல் மீது தூக்கிக்கொண்டு வந்து, ஆம்புலன்சில்  சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் உயிருக்கு போராடிய முதியவரை காப்பாற்றிய  காவலர் செல்வத்தை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

Tags : Commissioner ,suicide , Suicide, policeman, commissioner applause
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...