×

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் விழா: தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகளை நட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது வயதுக்கு ஏற்ப, மரக்கன்றுகள் நடும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும். தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து ரூ.10.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Jayalalithaa ,Birthday ,Govt , Jayalalithaa, Tree, Tamil Nadu Government, Government
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...