ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவான 105-அடியை எட்டி நிரம்பியது. நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியதால் வினாடிக்கு 7,502 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை தகவல் அளித்துள்ளது.