சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் நுழைந்து மருத்துவர், செவிலியரிடம் தகராறு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை டி.பி.சத்திரம் போலீஸ் தாக்கியதாக கூறி, மருத்துவ ரசீது வழங்குமாறு மருத்துவர் கோபிநாத்திடம் தகராறில் இளங்கோ ஈடுபட்டுள்ளார். மருத்துவர் கோபிநாத், செவிலியர் நாகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் மதுபோதையில் இருந்த இளங்கோவை போலீஸ் கைது செய்தது.