ஈரோடு: பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 104.17 அடி, நீர் இருப்பு 32.1 டிஎம்சி, நீர்வரத்து 6,076 கனஅடி, 2,600 கனஅடி வெளியேற்றம் செய்யப்படுகிறது.