×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடைக்காரருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக். இவரது மனைவி ராஜம். இவர்களது மகள் பத்மினி (10). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). கடந்த 1.6.2016 அன்று ராஜம் மகள், நித்யா பிளாட்ஸ் ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் பேச்சிமுத்து (50) என்பவரது கடையில் பால் வாங்க சென்றாள்.அப்போது கடைக்காரர் பேச்சிமுத்து, சிறுமியை மளிகை கடைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்று, நடந்த சம்பவத்தை தாயிடம் கூறினாள்.

இதுகுறித்து பெற்றோர், ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பேச்சிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், சிறுமியை பாலியல் சீண்டல் செய்த மளிகை கடைக்காரர் பேச்சிமுத்துவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சீத்தா லட்சுமி ஆஜரானார்.

Tags : Sexual harassment , Little girl, sexual harassment
× RELATED சென்னையில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: கைதானவர் மீது குண்டர் சட்டம்