தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத்தலைவர் திருமாவளவன் எம்பி நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், ஆண்டுக்கணக்கில் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இது சட்ட விரோதமான செயல். இந்த முறையாவது தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். மக்கள் பயனடைய வேண்டும் என்றால் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும்.
விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்று மக்களுக்கு தெரியும். இது இடைக்கால வெற்றி தான். இதனால் திமுக தலைமையிலான கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. பொதுமக்களின் ஆதரவு பெற்ற கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.