×

கம்ப்யூட்டரை ஹேக் செய்து மோசடி தொழிலதிபர் புகார்

திண்டிவனம்:  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செஞ்சி சாலையில் இரும்பு தொழிற்சாலை நடத்தி வருபவர் ஷாஜி. இவரது கம்பெனிக்கு கம்ப்யூட்டரில் பணிபுரியும் ரங்கநாதன் என்பவர் நேற்று காலை வந்து பணிகளை ஆரம்பித்தார். அப்போது அவருக்கு ஒரு மெயில் வந்துள்ளது. அதை ஓபன் செய்தவுடன் அனைத்து டேட்டாவும் ஓபன் ஆகவில்லை.  அவரது மொத்த டேட்டாவும் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் நோட் பேட் பைலில் 980 டாலர் செலுத்தினால் மட்டுமே டேட்டா திரும்ப அனுப்பப்படும் என்று இருந்தது. இதுகுறித்து தொழிலதிபர் ஷாஜி அளித்த புகாரின் அடிப் படையில் ரோஷனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : businessman , Computer, hack, fraud
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்