×

பத்திரிகையாளர்களுக்கு தேசிய பாதுகாப்பு திட்டம்

கொல்கத்தா: ஐநா அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ம் தேதி, பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சர்வதேச விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இன்று பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றங்களை முடிவுக்கு  கொண்டு வரும் சர்வதேச விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான `மாபோய்’ சுகாதாரத் திட்டத்தை அரசு ஏற்கனவே செயல்படுத்தி உள்ளது. தற்போது ஊடகத் துறையில் பணி புரிபவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில், பத்திரிகையாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டத்தை அரசு விரைவில் தொடங்க இருக்கிறது,’ என்று கூறியுள்ளார்.

Tags : National Security Program for Journalists ,Journalists , Journalist, National Security Program
× RELATED நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதித்த சிறை தண்டனை ஐகோர்ட் நிறுத்திவைப்பு