×

பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை: 200 கி.மீ. சைக்கிள் பேரணி

சென்னை: பணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் நேற்று தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீ விபத்து தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 50 தீயணைப்பு வீரர்கள் 200 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சைக்கிள் பேரணி நடந்தது. இந்த பேரணியை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இது, தாம்பரத்தில் தொடங்கி ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், மாமல்லபுரம் வழியாக மீண்டும் தாம்பரம் தீயணைப்பு நிலையத்தை வந்தடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை: 200 கி.மீ. சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Tags : rally ,CHENNAI ,Tambaram fire station ,Tambaram Firefighters… ,Bicycle Rally ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில்...